Skip to content

சுனிதா பூமிக்கு திரும்பினார்…. நலமுடன் இருப்பதாக நாசா தகவல்

  • by Authour

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்.7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து கடந்த செப்.28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகிய இரு வீரர்களுடன் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றது.

கடந்த 16-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். புதிய வீரர்கள் ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு திரும்புவது வழக்கம். இதற்கு 5 நாட்கள் வரை ஆகும். ஆனால் இந்த முறை 2 நாட்களிலேயே பழைய விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.

இதன்படி அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் 9 விண்கலத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு  சக  வீரா்களிடம் விடைபெற்றுக்கொண்டு பூமிக்கு புறப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் புளாரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக  இன்று  அதிகாலை  3.27 மணிக்கு பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின்  புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.மொத்தம் 287 நாட்கள் அவர்  இந்த முறை விண்வெளியில் இருந்துள்ளார்.

4.22 மணிக்கு சுனிதா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார்.  அவரை ஸ்டெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில் இன்று காலை   நாசா  வெளியிட்ட தகவலில்,   ‘சுனிதா  உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்  நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.  ஆனாலும் அவர்களுக்கு  நாசா மருத்துவமனையில் 6 வாரகால  பரிசோதனைகள், பயிற்சி அளிக்கப்படும்’ என்றனர்.
  சுனிதா இந்திய அம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பிரதமர் மோடி ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதம் அவரிடம் வழங்கப்படும். பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவருமே சுனிதாவின் வருகையை வெற்றிகரமாக கொண்டாடினர்.
 சுனிதா இந்த  பயணத்தையும் சேர்த்து மொத்தம் 608 நாட்கள் விணவெளியில்   தங்கி இருந்து உள்ளார்.  இதுவரை யாரும் இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருந்ததில்லை. இதையொட்டி சுனிதாவை இந்திய அரசு கவுரவித்து உள்ளது.  பெருமைக்குரிய மகளை  வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. நீங்கள் இந்தியா வருவீர்கள்  என்று ஆவலுடன்  எதிர்பார்க்கிறோம் என்று  பிரதமர் மோடி அனுப்பிய  கடிதத்தில்  கூறி உள்ளார்.

 

 

error: Content is protected !!