Skip to content

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் அனுபமா என்ற யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையை அதன் பாகன்கள் இருவரும் அருமனை அருகே உத்தரங்கோடு பகுதியில் தென்னை மரத்தில் இருந்து ஓலைகளை வெட்டுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது பாகன்களில் ஒருவரை திடீரென காணவில்லை. மற்றொருவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் யானை அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

error: Content is protected !!