Skip to content

திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என திமுக எம்.பி சிவா தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக மக்களவையில் பேசினார்.  தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது .  கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும் என கூறினார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் எனவும் பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பேச்சை திரும்ப பெற்றார்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் கருத்துக்கு திமுக எம்.பி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல. தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மும்மொழிக் கொள்கையில் எங்களுக்கு புரிதல் இல்லை எனக் கூற தர்மேந்திர பிரதானுக்கு அதிகாரமில்லை.ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என கூரினார்.

error: Content is protected !!