Skip to content

நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் வரவேற்றார்.

தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்   மாவட்ட பொருளாளர் முரளி, மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் பட்டேல், பொன்னன், சத்தியநாதன் , கோட்ட தலைவர்கள்
ராஜா டேனியல் ராய்,மலர் வெங்கடேஷ், பாக்கியராஜ்,
அணி தலைவர்கள்  ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், கவிதா நாச்சியார், அருள், வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், பழனி மற்றும் பலh;   கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது என எல்.முருகன்  கூறுகிறாரோ?

தமிழக அரசு கடும் சட்டங்களை இயற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல் துறையினரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் .
அங்கொன்றும், இங்கொன்றுமாக  சில சம்பவங்கள் நடைபெறுவதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுவது அரசியல் நடத்துவது எதிர்க்கட்சியின் வேலை. பாஜக ஆட்சியில் உள்ள மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லையா?
பாஜக ஆட்சிக்கு வந்தால் இதை தடுப்போம் என கூறுவது சரியான வாதம் அல்ல. அவர்கள் ஆளும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாக பாஜகவிற்கு  வேலை செய்கிறார்கள்   என்று ராகுல்  கூறியது குறித்து உங்கள் கருத்து என்ன?

சில இடங்களில் சிலர் ஒரு சிலரோடு இணக்கமாக இருந்து கொண்டு, யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பேசலாம், பழகலாம் அது வேற விஷயம். ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் விதத்தில், கட்சியை காட்டிக் கொடுக்கும் விதத்தில், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கட்சியுடனும் சேர்ந்து செயல்படக் கூடாது. அதைத்தான் ராகுல் காந்தி சொல்லி உள்ளார்.

நேற்று கூட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் ஒரு 5, 6 மாவட்டங்களில் கட்சிக்கு எதிராக சிலர் செயல்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆக எல்லா கட்சியிலும் இதுபோன்று நடைபெறுகிறது. கட்சி தலைவர்கள் கண்டிக்க கூடியது வழக்கமான விஷயம் தான். இதில் அதிர்ச்சி ஒன்றும் கிடையாது. அது போல் இருந்தால் நடவடிக்கை எடுப்பது வாடிக்கையான, சகஜமாக, நிகழக்கூடிய விஷயம் தான்.

திமுகவை நேரடியாக விஜய் விமர்சனம் செய்கிறாரே:

கட்சி ஆரம்பித்த காலம் முதலிலேயே திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதை மையமாக வைத்தே விஜய் விமர்சித்து வருகிறார். மற்ற கட்சிகளை அவர் அதிகமாக விமர்சனம் செய்வதில்லை. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை. காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சனம் செய்வதில்லை, அதனால் பிரச்சனை இல்லை, நல்லது தான்.
பல கட்சிகளை அவர் விமர்சனம் செய்வதில்லை,
அவர் தாக்குதல் பெரும்பாலும் திமுக மீதுதான் உள்ளது. திமுக ஆட்சியில் இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்கிறார். அது அவருடைய ஆசை, லட்சியம், கனவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. அதனால் யாராலும் ஆட்சியை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் கூட்டணியில் வலுவாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய கட்சியில் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!