Skip to content

புதிய காய்கனி மார்க்கெட் கட்டுமான பணி: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு  கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இங்கிலீஷ் காய்கனி, நாட்டு காய்கனி, தக்காளி, வெங்காயம், உருளை, சேனை ,கருணை கிழங்கு, மாங்காய், தேங்காய்,  புஷ்பம், பழக்கடைகள் என பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:
திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பஞ்சப்பூரில் புதிதாக அமைந்துள்ள பெரிய பேருந்து நிலையம் அருகில் அமைய உள்ள புதிய காய்கறி மார்க்கெட் செயல்பாட்டுக்கு வரும் வரை நமது காந்தி மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், தற்போது நடைமுறையில் யார் யார் எந்தெந்த வியாபாரங்கள் எந்தெந்த வகையில் தொழில் செய்து வருகிறோமோ அதே நிலையில் தொடர்ந்து வியாபாரம் செய்வது,

புதிதாக அமைய உள்ள காய்கனி மார்க்கெட் கட்டிட வேலைகள் தொடங்கும் முன் (கள்ளிக்குடி போல் ஆகிவிடாமல்) எங்களது சங்கங்களின் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து எந்தெந்த வியாபாரத்திற்கு எவ்வளவு சதுர அடிகள் தேவைப்படும் என்பதை உறுதி செய்து உருவாக்க வேண்டும்.

மற்றும் வியாபாரிகள்,விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் ஒருசேர பயன்பெறும் வகையில் செயல்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என்பது உள்ளிட்ட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

error: Content is protected !!