கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை. இதனால் ராகுல் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரர் அருண் வீட்டை விட்டு வெளியே சென்றார்.அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் திருடிய 2பேர் கைது…
திருச்சி ஏர்போர்ட் கணேஷ் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகன் ஆகாஷ் பாரதி. இவர் தனது இருசக்கர வாகனத்தை (புல்லட் ) வீட்டு முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். பின்னர் வீட்டில் தூங்கி முழித்தவுடன், வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாதது கண்டு திடுக்கிட்டார். உடனே இதுகுறித்து ஆகாஷ் பாரதி ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரியின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக கே.கே.நகர் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், லால்குடி தாளக்குடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தாயுமானவன் ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புல்லட் பறிமுதல் செய்யப்பட்டது.