திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், இவருடைய மனைவி ராஜேஸ்வரி . இவர்களது மகன் பாலாஜி. சில வருடங்களுக்கு முன் வெங்கடேசன் இறந்து விட்டார்.
கடந்த 1ம் தேதி பாலாஜி அவரது தாயார் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றனர்.
அப்போது சிங்காரப்பேட்டை மகனுர்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவிற்காக பரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து இரண்டு பேரும் பரோட்டாவை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் இரண்டு பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஓட்டலில் வாங்கிய பரோட்டா சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அந்த ஓட்டலில் ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.