சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப்போட்டி நேற்று துபாயில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில்
இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க இந்த ஓய்வை அறிவித்ததாகவும் அவர் கூறினார். அதே நேரம், டி20, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.