Skip to content

திருச்சி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் 31,580 மாணவர்கள் ….

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகியது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 131 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. அந்த தேர்வில் 16,864 மாணவிகள் 14,716 மாணவர்கள் என மொத்தம் 31580
மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 324 பேர் தேர்வு எழுதுகின்றனர். சிறைவாசிகள் 24 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ரேம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோல் மின் தடை இல்லாமல் அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு

வருவதற்கு போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

131 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனித் தேர்வர்களுக்கு 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 549 பேர் தனித்தேவர்களாக 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்

பொது தேர்வை கண்காணிப்பதற்காக 230 பறக்கும் படையினர் பணியமற்றப்பட்டுள்ளனர் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக மாணவிகள் தேர்விற்கு தயாராகினர். குறிப்பாக தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்தை மீண்டும் நினைவுகூர்ந்தனர். மாணவிகளுக்கு ஆசிரியர்களும் வழிகாட்டல்களை வழங்கினர். தொடர்ந்து தேர்வு அறைக்கு சென்ற மாணவர்களுக்கு 10 மணிக்கு வினாத்தாளும் 10.15 க்கு விடைகள் எழுதும் தாளும் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.

error: Content is protected !!