கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்தம்பித்தது போக்குவரத்து நெரிசல். பறக்கும் சாலை திட்டத்தால் சாலையின் நடுவில் அடிக்கப்பட்டுள்ள இரும்பு தகடுகள் – குறுகலான சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சைலன் ஒளியை எழுப்பியவாறு சிக்கி தவிக்கின்றன ஆம்புலன்ஸ்கள் . மதுரவாயலில் இருந்து கோயம்பேடு
வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து போலீசாரை கூடுதலாக பணியில் அமர்த்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.