இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது/
இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் ஆகும் என்றார்.