அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட் தீர்ப்பு குறித்து எடப்பாடி அப்பீல் செய்தால், அதில் எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பது இந்த கேவியட் மனுவில் முக்கிய அம்சமாகும்.