Skip to content

தஞ்சை அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி… 4 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மேலவழுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஷேக் தாவுது ராவுத்தர். இவர் காலமாகிவிட்டார. இதையடுத்து ஷேக் தாவுது ராவுத்தர் உயிருடன் இருப்பதாக அவருக்கு சொந்தமான பொன்மான்மேய்ந்த நல்லூர் பகுதியில் இருக்கும் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தினை திருச்சி காஜா பேட்டையை சேர்ந்த உஸ்மான் ரஹீம் கான் என்பவர் சேக் தாவூத் ராவுத்தர் பெயரில் போலி ஆதார் அட்டை தயார் செய்து கடந்த 2-1-2023 அன்று ஆவண பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக போலி ஆவணம் கண்டறியப்பட்டு பாபநாசம் சார்பதிவாளர் காவியா புகார் அளித்தார். அந்தப் புகாரின் பெயரில் தஞ்சை எஸ் பி ராஜாராமன் உத்தரவின் பேரில் பாபநாசம் டிஎஸ்பி முருகவேல் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர் போலி ஆவணம் தயாரித்தல் ஆள்மாறட்டும் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து
பாபநாசம் அருகே பண்டாரவடை பகுதியைச் சேர்ந்த முகம்மது யூசுப்அலி (50), திருச்சி காஜாபேட்டை பகுதியை சேர்ந்த உஸ்மான் (60), திருப்பாலத்துறை பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் (58), தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (37) ஆகியோர் நான்கு பேரையும் கைது செய்து பாபநாசம் கோட்டில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் கனி 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!