Skip to content

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சின் சக்கரம் முன்அதிவேகமாக பாய்ந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி தெற்குபோக்கு வரத்து புலனாய்வுபிரிவு போலீசார் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோ அபிஷேகபுரம் விஏஓ ராஜேஸ் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். பின்னர் உயிரிழந்த 38 வயது ஆண் நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!