அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.12.2024) தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் காணொலிக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தினை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவனாந்தன், மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.