Skip to content
Home » குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்(35).  பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பரந்தாமன் உணவு அருந்த வீட்டிற்கு தனது பேஷன் ப்ரோ டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றுள்ளார். சுந்தரப்பன்சாவடி என்ற இடத்தில் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக இருக்கும் அந்த , தற்போது பெய்து வரும் மழையில் சேரும் சகதியுமாக இருக்கும் நிலையில் பரந்தாமன் டூவீலர் கருங்கல் ஜல்லியில் சறுக்கியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது எதிரே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் பரந்தாமன் மீது மோதியது. இதில் பரந்தாமன் இடுப்பு பகுதி முற்றிலுமாக நொறுங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து பரந்தாமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். இறந்த போலீஸ் பரந்தாமனுக்கு திருமணம் ஆகி மாயா என்ற மனைவியும் நான்கு வயதில் பிருந்தா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!