ராமநாதபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து பிரேக் ஷூ கழன்று விழுந்ததில் விவசாயி உயிரிழந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் பிரேக் ஷூ திடீரென கழன்று விழுந்தது. தண்டவாளம் வழியாக சென்ற விவசாயி சண்முகவேல் தலையில் ரயிலின் பிரேக் ஷூ விழுந்தது. சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
