Skip to content
Home » கடமைக்கு கண்காணிப்பு கோபுரங்கள்…. திருச்சி மாநகர போலீசாரின் அலட்சியம்…

கடமைக்கு கண்காணிப்பு கோபுரங்கள்…. திருச்சி மாநகர போலீசாரின் அலட்சியம்…

தீபாவளியையொட்டி திருச்சி மாநகர போலீசார் சார்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க  என்எஸ்பி ரோடு, சின்னகடை வீதி, பெரிய கடைவீதி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கென தனியாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டு இதற்கென போலீசார் நியமிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு தீபாவளியொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி கண்ட்ரொல் ரூமில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாநகர போலீஸ் கமிஷினர் காமினி கலந்து கொண்டார். மாநகர போலீசார் சார்பில் அமைக்கப்பட்ட

இந்த கண்காணிப்பு கோபுரங்கள் பெயரளவுக்கு தான் உள்ளது என்ற விபரம் தற்போது வௌியாகியுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள் என்றால் ஒரு போலீஸ்காரர், அதன் மேல் அமர்ந்து பைனாகுலர் மூலம் கண்காணிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெயரளவுக்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல ஏற போலீசாருக்கு என எந்த வசதியும் இ்லலை. இந்த விவகாரம் திருச்சி மாநகர போலீசார் மத்தியிலும் , பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!