Skip to content
Home » திருச்சி தீயணைப்பு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு…. ரூ. 1 லட்சம் பறிமுதல்..

திருச்சி தீயணைப்பு அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு…. ரூ. 1 லட்சம் பறிமுதல்..

  • by Senthil

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம், பரிசுப் பொருட்கள் வாங்குவதை கண்காணிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 69 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று திருச்சி கன்ட்டோண்மென்ட் பகுதியில் செயல்படும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.  இந்த சோதனையில் திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ஜெகதீஷ் காரில் ரூ.90 ஆயிரம் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், தொடர்ந்து அலுவலகத்தில் 10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.  மொத்தமாக ரூ. 1லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இப்பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணையும் அலுவலகத்தில் சோதனையும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!