Skip to content
Home » புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

  • by Senthil

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்திருந்தது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா, நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள்.இதில் கில் 30 ரன்னிலும், ஜெய்வால் 30 ரன்னிலும், கோலி 1 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 83 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி யது.  பின்னர் வந்த ஜடேஜா சிறிது நம்பிக்கை அளித்தார். அவரும் 38 ரன்னில் அவுட் ஆனார்.  சர்ப்ராஸ்கான்(11), ஆகாஷ் தீப்(6), அஸ்வின்(4),  பும்ரா(0) என அனைத்து விக்கெட்டுகளும் சீட்டு கட்டுகள் போல சரிந்தன.

45.3 ஓவரில், 156 ரன்கள் மட்டும் எடுத்து, இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுடன் ஆவுட் ஆகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர்(7), பிலிப்ஸ்(2). சவுதி(1)   விக்கெட்களை  வீழ்த்தினர்.  முதல்  இன்னிங்சில் இந்தியா 103 ரன்கள் குறைவாக  எடுத்து பின் தங்கி உள்ளது.

இந்த நிலையில்  நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களக லேசம், கான்வே இறங்கினர். இதில் கான்வே(17) ரன்னில் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து மிட்செல்(18), ரவீந்திரா(9),  யங்(3)ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தற்போது  லேதம்(76), பிளண்டல்(20) ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.  நியூசிலாந்து 4 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்திருந்தது.  இதில் 3 விக்கெட்டுகளை  வாஷிங்டன் கைப்பற்றினார். ஒரு விக்கெட் அஸ்வினுக்கு விடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!