Skip to content
Home » இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Senthil

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த முகாமில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். மேலும், இம்முகாமில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில் குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்‌, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு, பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சாரங்கன் இந்த விழிப்புணர்வு முகமானது, சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் நடைபெறுவதாக கூறினார். தங்கள் ஆணையம் சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் இது குறித்து சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தல், அதை விளம்பரப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் ஆணையத்தின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் அரசு மருத்துவமனைகளில், உளவியல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் மேற்கண்ட ஐஜி மற்றும் மாநகர காவல் ஆணையாளரும் ஆன்லைன் விளையாட்டு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாரங்கன்… அரசின் முயற்சியில் மாணவர்களை ஆன்லைன் மோகத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது உளவியல் விஷயங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முகாம்கள் நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்களுடன் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்துவதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் சூதாட்டம் என்பது படிப்பிற்கும் விளையாட்டு மோகத்திற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்த அவர் சில ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விளையாட விளையாட விளையாட விளையாட அதற்கு அடிமையாகிறார்கள் எனவும் சாதாரணமாக விளையாட துவங்கி இறுதியில் பணத்தை வைத்து விளையாடி பிறகு வேலை படிப்பு உள்ளிட்டவற்றில் நாட்டம் இல்லாமல் சென்று விடுவதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆய்வறிக்கை மேலும் தங்கள் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார். ஆன்லைன் விளையாட்டு வெப்சைடுகள் பலதும் விதிமுறை இன்றி செயல்படுவதாகவும் வெளிநாடுகளில் இருந்து அந்த வெப்சைடுகள் இங்கு பேட்ச் செய்யப்படுவதாக தெரிவித்தார். இது போன்ற வெப்சைடுகளை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க அதனை தடை செய்து வருவதாகவும் கூறினார். குழந்தைகள் விளையாடுகின்ற சில விளையாட்டுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர் பேட்டி அளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் போக்குவரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வாகன நிறத்த பகுதிகளை அதிகமாக கண்டறிந்து வாகனங்கள் நெரிசல் நிறைந்த பகுதிகளில் வராமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் விடுமுறை நாட்களில் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக கூறினார். தீபாவளி சம்பந்தமாக தற்பொழுது வரை எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். பட்டாசு கடைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் லைசன்ஸ் இல்லாமல் ஆன்லைன் பட்டாசு விற்பனை செயல்படுவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்து காவலர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு நாளைக்கு 350 காவலர்களும் அது தவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு காவலர்களும் பணியில் இருப்பதாக தெரிவித்தார். இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வரப்பெற்றது தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஒரு சில குற்றவாளிகள் டார்க் ப்ரவுசர் மூலம் இதனை செய்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் சூதாட்டம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் மேஜிக் சாகசங்களும் நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!