Skip to content
Home » போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

  • by Senthil

ஜெயலலிதா ஆட்சியில் 2001ம் ஆண்டில்  கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது டிஜிபியாக இருந்தவர்  ரவீந்திரநாத். இவர்தான் கருணாநிதியை கைது செய்வதில் பெரும்பங்கு வகித்தவர். கைது நடவடிக்கையின்போது  கருணாநிதியை முரசொலி மாறன் தான் தள்ளிவிட்டார் எ்னறும் பேட்டி கொடுத்தவர்.

இப்போது ரவீந்திரநாத்தின் மகன் அருண்  போதை பொருள் கடத்தல்,  பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவர் பல கோடி மதிப்புள்ள வெளிநாட்டு போதை பொருளான மெத்தபெட்டமைன்  பதுக்கி வைத்திருந்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருடன் நைஜீரியாவை சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!