Skip to content
Home » ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் திருச்சி வரை இடைநில்லா செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டம்- திருப்பூர் செல்லும் பேருந்து உள்ளிட்ட மூன்று பழைய பேருந்துகளை மாற்றி,புதிய பேருந்துகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதிய பேருந்தினை கொடியசைத்து இயக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் ராமநாதன்,வட்டாட்சியர் சம்பத்,ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி

சிவக்குமார்,துணைத தலைவர் வெ.கொ.கருணாநிதி, ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராம்குமார்,நகராட்சி ஆணையர் அசோக்குமார்,கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், ஒன்றிய கழக செயலாளர்கள் இரா.மணிமாறன் (ஜெயங்கொண்டம் தெற்கு),ரெங்க.முருகன் (ஆண்டிமடம் வடக்கு),ஆர்.கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு),ப.தனவேல் (தா.பழூர் மேற்கு பொருப்பாளர்),உடையார்பாளையம் பேரூர் செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட,ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள்,அனைத்து அணி நிர்வாகிகள்,கழகத் தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!