Skip to content
Home » சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

சட்டமன்ற உறுதிமொழிக்குழு….. புதுகையில்ஆய்வு

  • by Senthil

புதுக்கோட்டை , ANS PRIDE ஹோட்டலில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு  ஆய்வுக்கூட்டம்  வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள்  மற்றும்  மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே, மேயர் திலகவதி செந்தில்  மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது குழு தலைவர் வேல்முருகனிடம் கீழ 2-ம் வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மடக்கு சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமையில் இன்று (22.10.2024)  வேல்முருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் .ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), .ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  (விருதுநகர்), சா.மாங்குடி  (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகர்), புதுகை  மேயர் திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அப்தாப் ரசூல்,, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!