Skip to content
Home » கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

கவர்னர் வருகை…. கொடைக்கானலில் தமிழ்த்தாய் வாழ்த்து போஸ்டர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

  • by Senthil

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘தெக்கணமும், அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற  வார்த்தைகள் மட்டும் பாடாமல் விடப்பட்டது.  வேண்டும் என்றே இதை  விட்டு விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழும்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தொலைக்காட்சி நிலையம் மற்றும் கவர்னர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில்  கவர்னர் ரவி இன்று கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு  சென்றுள்ளார். கவர்னர் வருகையை தொடர்ந்து கொடைக்கானல் முழுவதும் இன்று   தொலைகாட்சி விழாவில் பாடாமல் விடப்பட்ட, தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாசகங்கள் அடங்கிய தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு பகுதி மட்டும்  அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. திராவிட தமிழர் மன்றம் சார்பில் இவை ஒட்டப்பட்டு இருந்தது.

தமிழிலும், ஆங்கிலத்திலும் இவை ஒட்டப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் அகற்றினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!