Skip to content
Home » சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள்! சட்டமன்றஉறுப்பினர்கள்.ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), .ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருநகர்), .சா.மாங்குடி  (காரைக்குடி), .எம்.கே.மோகன்  (அண்ணாநகர்), அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.டிராமச்சந்திரன் ஆகியோரும் இந்த ஆய்வை நடத்தினர்.  ஆய்வின்போது கலெக்டர் அருணா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், , மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் ,அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் .ச.சிவக்குமார்,  டாக்டர் .சா.ஸ்ரீபிரியா   அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் .ஆனந்த், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மழையூர் காவலர் குடியிருப்பு,  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி,  ஆகிய இடங்களிலும் ஆய்வு  செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!