திமுக ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.அதிமுக ஆட்சியில் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை இருக்கலாம், ஆனால் மக்கள் தான் முடிவெடுப்பார்கள். திமுக கூட்டணியில் உள்ளகட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்;அவருக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது; அவரும்பொது சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறார்; கட்சி தொடங்கியுள்ளார்;தவெக மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.
எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.