Skip to content
Home » பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

  • by Senthil

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே டோட்டல் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு பங்க் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்குள் சென்றுள்ளது.அப்போது வேனின் முன்பகுதியிலிருந்து புகை வந்ததால் உடனடியாக பங்கின் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் அதிலிருந்து இறங்கி

ஓடவே கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து வேன் முழுவதும் எரிய துவங்கியது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வருவதற்கு முன்பாகவே வேன் முற்றிலும் தீக்கிரையானது. அதிஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்ட உடனே பெட்ரோல் பங்கில் மின் இணைப்பை ஊழியர்கள் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தியணைப்பு வீரர்கள் கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்ததுடன் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!