Skip to content
Home » திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Senthil

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர். அவர்களிடம் போதை ஆசாமிகள் மூவரும்  தகாத வார்த்தையால் பேசினர்.

இதை அறிந்து அங்கு சென்ற  இந்திய மாணவர் சங்கத்தின் கிளை துணை செயலாளர் துளசி ராம், மாவட்ட தலைவர் வைரவளவனை  அந்த மூவரும் தகாத வார்த்தையால் பேசி தாக்க ஆயன்றனர்.

இது குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு எண்ணிற்கு (100 ) இந்திய மாணவர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன் புகார் அளித்தார். துவாக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  போதை ஆசாமிகள் 3 பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரவளவன்   காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய திருவெறும்பூர் DSP ஜாபர் சித்திக் உத்தரவிட்டார்.இைசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!