Skip to content

விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கரூர் திமுக அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஒரு அன்பு கட்டளையை பிறப்பித்து விட்டு போய் இருக்கிறாராம்  அமைச்சர். விரைவில் வரப்போகும் தனது பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள், பேனர்கள் என எந்த விளம்பர ஆடம்பரங்கள் எதுவும் இருக்க கூடாது. தன்னுடைய  இந்த உத்தரவையை யாரும் மீறக்கூடாது எனவும் கடுமையாக கூறிவிட்டு சென்றிருக்கிறாராம் அமைச்சர் செந்தில்பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!