Skip to content

அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி,  நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

எத்தனை இடங்களில்  இருந்து மின்சாரம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டது. அதை எவ்வளவு நேரத்தில் சரி செய்தீர்கள் என  அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த நடவடிக்கையால்,  நேற்று அடாத மழை பெய்த நிலையிலும் ஒரு நிமிடம் கூட சென்னை பெருநகரில் மின் தடை ஏற்படவில்லை.  இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!