Skip to content

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13, 14 தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், 14ம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை இருக்கும். 14ம் தேதி கனமழை எதிர்பார்க்கலாம். வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மற்றொரு சுழற்சி உருவாகும் சூழல் நிலவுகிறது. இதனால், 5 நாட்களுக்கு மழை தொடரும். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!