Skip to content
Home » தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

தஞ்சையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை

  • by Senthil

தஞ்சை ஆடக்கார தெருவை சேர்ந்தவர் சின்னராசு (வயது 24) . இவர் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார் . இன்னும் திருமணமாவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்னராசு வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராத சின்னராசுவை அவரது பெற்றோர் , நண்பர்கள் பல பகுதியில் தேடி வந்தனர் .
இந்த நிலையில் ஆடக்கார தெரு பகுதியில் சுடுகாடு எதிரே அழுகிய நிலையில் சின்னராசு பிணமாக கிடந்தார் .
இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சின்னராசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால் சின்னராசு இறந்தாரா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!