Skip to content
Home » வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

வடகிழக்கு பருவமழை 15ம் தேதி தொடங்கும்

திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.  திருச்சியில் நேற்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை வெளுத்துகடடியது. அதன் பிறகும் மழை தூறிக்கொண்டே இருந்தது. திருச்சி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தமிழ்நாட்டில் அக்டோபர் 9ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  வரும் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக 20ம் தேதி வாக்கில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இப்போது 5 நாட்கள் முன்னதாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!