Skip to content
Home » தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..

தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை இருக்கும்..

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: வங்கக்கடலில், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை. இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 9ம் தேதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில், வடக்கில் இருந்து வரும் வெப்பக்காற்று காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.

இன்று:

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலுார், மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும்.

நாளை

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவையில் நாளை கன மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!