Skip to content
Home » நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி..

நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி..

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி சென்னையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரத்தநாளம் வீக்கமே உடல்நலம் பாதிக்க காரணம் என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார். மருத்துவமனையில் ரஜினிகாந்த் இருந்த போது ஏராளமான ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவரது உடல்நலம் குணம் பெற பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை.. நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.. அறிக்கைக்கு முன்னதாக எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!