Skip to content
Home » திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 38வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை பெற்ற தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்புப் படை எண் 1 அலுவலகத்தில் பாராட்டு விழா
28.09.24 சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையில், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் நடராஜ் , லாசர், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

ஈரோட்டில் 19.09.24 யிலிருந்து 21.09.24 வரை நடந்த மாநில அளவிலான 38வது ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024

போட்டிகளில் திருச்சி மாவட்டம் சார்பில் 136 பேர் கலந்து கொண்டார்கள். இதில் 14 பேர் பல பிரிவுகளில் பதக்கங்கள் பெற்றார்கள். ஒட்டு மொத்த சாம்பியன் மாநில அளவில் 5 வது இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டத்திற்கு கோப்பை பெற்றார்கள் . வெற்றி பெற்றவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பாக திருச்சி மாவட்ட தடகள சங்க உபத்தலைவரும், தமிழ்நாடு சிறப்புப்படை காவல் பட்டாலியன்-1 கமாண்டன்ட் எம்.ஆனந்தன், நினைவு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியிற்கு தடகள சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், லட்சுமணன், ஜீவானந்தம், தடகள வீரர்களின் பெற்றோர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!