புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூர், தாந்தோனிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் விரதமிருந்து, கோயில் முன்பு மொட்டை போட்டு வழிபட்டனா். கோயிலில் சிறப்பு நுழைவு வாயில்
வழியாக வந்த பக்தா்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பக்தா்களின் அன்னதானம் நடைபெற்றது.
தங்களது தோட்டங்களில் விளைந்த கடலை உள்ளிட்டவற்றை கோயிலின் முன்பு விவசாயிகள் காணிக்கையாக படைத்திருந்தனா். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்தை துண்டித்து, வேகத்தடை அமைத்து காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கரூா் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.