Skip to content
Home » ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மேற்கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!