Skip to content
Home » குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியிருந்தார். இந்த திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு மத வாதத்தை ஒழிப்பதில், சமூக நீதியை காப்பதில், திமுகவோடு தோள் கொடுக்கும் கட்சிகளில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பதையும், இடதுசாரி சிந்தனைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் தலைவர் திருமாவளவன் என்பதிலும் எனக்கோ, எங்களது தலைவருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை அந்த கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசி இருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்‌. இந்த கருத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறியவரை அவர் அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. திருமா இது போன்ற கருத்துக்களை ஒரு நாளும் ஏற்க மாட்டார். ஏற்கக் கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன். திருமாவளவன் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் என்பது எனது நம்பிக்கை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!