Skip to content
Home » கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கத் தாலியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கடந்த இரண்டாம் தேதி பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஷ்ராவத் உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் மேற்பார்வையில் பாப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமை காவலர் ராஜா, சின்னத்துரை,ஜெகன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மனோஜிப்பட்டியைச் சேர்ந்த தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அய்யாவு என்பவரது மகன் திவாகர் (32) என்பவரை கைது செய்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திவாகருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒரத்தநாடு திருவோணம், தஞ்சை,திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில்களில் உள்ள அம்மன் சிலைகளில் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை மட்டும் கொள்ளையடிப்பது வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும் திருட்டு தொழிலுக்கு செல்லும் பொழுது அவர் பயன்படுத்தும் பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி சென்றுள்ளார். ஒரத்தநாடு பகுதியில் சமீப காலங்களில் நம்பிவயல், சோழபுரம் மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்பது கிராம் நகையை இவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திவாகரை கைது யெ;து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!