Skip to content
Home » கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

  • by Senthil

பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து முடித்ததும் 2022ம் ஆண்டு ஆண்டுக்கு ரூ.1.08 கோடி சம்பளத்தில் அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்தது. 2023ம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய அவர், ஜெர்மனியில் உள்ள பன்னாட்டு முதலீட்டு நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இருப்பினும் கூகுளில் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அமோசானில் வேலை பார்த்துக்கொண்டே அதற்கு தேவையான படிப்புகளை படித்து வந்தார். அவரது கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பலன் கிடைத்தது. சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் நடந்த நேர்முக தேர்வில் அபிேஷக் குமார் வெற்றி பெற்றார். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.08 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்.,மாதம் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!