Skip to content
Home » மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு… அரியலூர் கலெக்டர் உத்தரவு…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து

மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, கூட்டுறவுத்துறையின் மூலம், ஸ்ரீபுரந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.4,84,800 மதிப்பிலான பயிர்க் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார். தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு நாட்டுபுறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் மூக்கு கண்ணாடி நிதியுதவி மற்றும் கல்வி நிதியுதவி என மொத்தம் 06 நபர்களுக்கு ரூ.1,02,500 மதிப்பிலான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!