Skip to content
Home » நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள்  நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்தது. அந்த கப்பல் நாகை மீனவர்களின் படகில் வேகமாக மோதியது. இதனால் படகு சேதமடைந்தது. படகில் இருந்த 4 மீனவர்கள் நிலைகுலைந்தனர்.

அதற்குள் சிங்கள கடற்படையினர்  தமிழக மீனவரின் படகில் ஏறி அவர்களை தாக்கினர். இதில் கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயமடைந்தனர்.  அவர்கள் இன்று காலை கரை திரும்பினர். அவர்கள் நாகை மருத்துவமனையில் அமனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!