Skip to content
Home » திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று    அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு  மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள்,  மேலும் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

கூட்டம் முடிந்ததும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழைகள் வீடுகள் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 12 ஆயிரம் பேருக்கு மேல் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

அரசு காப்பீட்டு திட்டத்திற்கு அறுவை சிகிச்சைக்கு உடனடியாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் காவல்துறை 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் .சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது .மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பாதுகாப்பாக உள்ளது
கைதிகளுக்கு நோய்வாய் பட்டால் அவர்களையும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மாநில அரசு நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது
மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டம் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் தொகை மிகவும் குறைவான தொகை
அதில் வீடு எல்லாம் கட்ட முடியாத அளவுக்கு மிகவும் குறைவான தொகையை தான் அளிக்கிறார்கள் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா பாராளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக இருப்பதால் வலியுறுத்தி கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க நடவடிக்கை எடுப்பார்

விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம் ,கலந்து கொள்ளலாம் .ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான் அவர்கள் இருப்பார்கள் முதல்வரும் திருமாவளவன் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விரும்புகிற மிகச்சிறந்த நண்பராக திருமாவளவன் உள்ளார். அவர் யாரை அழைத்தாலும் முதல்வரை விட்டு எங்கேயும் போக மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!