Skip to content

நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்”.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த சக நடிகர்.!..

ஹேமா அறிக்கை வெளியான நாளிலிருந்து மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிவின் பாலி படவாய்ப்பு தருவதாக வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடகை ஒருவர் புகார் கூறி இருக்கிறார்.

புகாரின்படி, நடிகர் நிவின் பாலி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி துபாயில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இத்தனையடுத்து, இந்த புகார் முற்றிலும் உண்மை இல்லாத ஒன்று. இந்த புகார் ஆதாரமற்றவை எனவும் இதை சட்டப்படி சந்திக்க போகிறேன்” என நிவின் பாலி கூறியிருந்தார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய நடிகர் நிவின் பாலிக்கு ஆதரவாக இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல் புகார் பொய் என்று கூறிய வினீத், சம்பவம் நடந்ததாக புகார்தாரர் கூறிய நாளில் நிவின் தன்னுடன் இருந்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ” 2023 டிசம்பர் 14 அன்று, நிவின் என்னுடன் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ படப்பிடிப்பில் இருந்தார்.

மறுநாள் (டிசம்பர் 15) அதிகாலை 3 மணி வரை என்னுடன் இருந்தார். படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் உள்ள நியூக்ளியஸ் மாலில் நடந்தது. பிறகு அவர் கேரளாவில் ‘ஃபார்மா’ என்ற வெப் சீரிஸுக்குப் படப்பிடிப்புக்கு சென்றதாக” கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை. அவர் கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியதற்கான ஹோட்டல் ரசீது வெளியாகியானது. அதன்படி, நிவின் பாலி டிச.14ம் தேதி மதியம் முதல் டிச.15ம் தேதி மாலை வரை அங்கேயே தங்கியிருந்தாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!