Skip to content
Home » திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

விஜய்யின் த.வெ.க மாநாடு இம்மாதம் 22 அல்லது 23 தேதிகளில் நடைபெறும்என கூறப்பட்ட நிலையில் அம்மாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் மாநாடு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!