சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஏட்டு கமலக்கண்ணன், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் அத்துமீறி சேட்டைகள் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து கமலக்கண்ணன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏட்டு கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.