Skip to content
Home » செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

செங்கல்பட்டு…..மாணவர்களிடம் கஞ்சா…. 500 போலீசார் விடுதிகளில் ரெய்டு

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே தனியார் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவை  செயல்படுகிறது.  இங்கு படிப்பவர்கள் அருகில் வீடுகள் எடுத்தும்,  விடுதிகளிலும் தங்கி உள்ளனர். இவர்கள் மத்தியில் கஞ்சா  புகைக்கும் பழக்கம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து  கல்லூரி விடுதிகளில், தனியார் விடுதிகள், மாணவர்கள் தங்கி உள்ள வீடுகள் ஆகிய இடங்களில்  போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  500-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!