பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட 4 பேரும் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை எழும்பூர் நீதிமன்ற வாசலில் இருதரப்பு வக்கீல்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகியோருக்கும், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜன், சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து வெளியிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த மணியரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் பொறுப்பு செயலர் கிரிதா செந்தில்குமார் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய வக்கீல்கள் 4 பேர் தொழில் செய்ய தடை
- by Authour
